இன்னும் சற்று நேரத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படவுள்ளதை அடுத்து சற்று நேரத்திற்கு முன்னர் அனைத்து கட்சிகளின் முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர். வாக்குகளை எண்ணும் அதிகாரிகள் ஒவ்வொருவராக வரத்தொடங்கிவிட்ட நிலையில் சரியாக 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும்
அரசியல் கட்சிகளின் முகவர்கள் சோதனைக்கு பின்னர், அவர்கள் அடையாள அட்டையை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நேரத்தில் எந்தவித அசம்பாவிதமும் நேராமல் இருக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இன்னும் ஒருசில மணி நேரத்தில் சட்டமன்றத்திற்குள் செல்லும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ யார் என்று தெரிந்துவிடும் என்பதால் ஆர்.கே.நகர் பொதுமக்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் இந்த தொகுதியின் முடிவினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.