இன்னும் ஒரு ஆண்டுதான் கெடு: மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

ஒரு நாடு, ஒரு ரேஷன் அட்டை திட்டத்தை இன்னும் ஓராண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்திய குடிமகன் ஒருவர் தனக்கான ரேஷன் பொருளை எந்த மாநிலத்திலும் வாங்கிக் கொள்ளும் நடைமுறை கொண்டு வரப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டத்தை அனைத்து மாநிலங்களும், மத்திய ஆட்சிப் பகுதிகளும் அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்

இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் விட்டு மாநிலம் செல்வோர் எளிதாக ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்றும் போலி ரேஷன் கார்டுதாரர்களை கண்டறியவும் இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply