இனி உலக அரங்கில் மாமல்லாபுரம்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவீட்

சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோர்களின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற திட்டமிட்ட மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

மாமல்லபுரம் என்ற பழமையான நகரம் இருப்பது இன்று ஒரே நாளில் உலகிற்கே தெரிந்துவிட்டது. இந்த நிலையில் இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு செய்த டுவீட்டில் கூறியதாவது:

வங்க கடலோரம்… என்ன அருமையான காட்சி. நன்றி பிரதமர் நரேந்திரமோடி அவர்களே. பாரத நாட்டின் பண்பு, கலை, சிற்ப மற்றும் அரசாட்சிக்கும் எடுத்துகாட்டாக விளங்கும் பல்லவர் தலைத்தோங்கி செழித்த கடலோரத்தில் இன்று, சீன அதிபர் #Xi உடனான பேச்சுவார்தைகள். என்றும் உலக அரங்கில் #மாமல்லாபுரம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த டுவீட்டில் இன்று காலை பிரதமர் மேற்கொண்ட நடைப்பயிற்சி குறித்த அழகிய புகைப்படங்க்ளையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது

Leave a Reply