இந்த ஜென்மத்துல முகினுக்கு அது நடக்காது: ரேஷ்மா

பிக்பாஸ் வீட்டில் இன்று சிறப்பு விருந்தாளியாக ரேஷ்மா, மோகன் வைத்யா, மிரா மிதுன் மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் வருகை தந்தனர். ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே, முகினுடன் மிகுந்த பாசத்துடன் இருந்தார் என்பதும் இருவரும் தாய்-மகன் போல் பழகி வந்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று அனைவர் முன்னிலையில் பேசிய ரேஷ்மா, ‘முகின் நீ இந்த ஜென்மத்துல அனாதை ஆக முடியாது. அந்த அளவுக்கு வெளியே உனக்காக அன்பு காத்திருக்கின்றது. நீ வெளியே வந்தால் உனக்கே இது புரியும், நானும் உன் மீது உண்மையான அன்பு செலுத்துகிறேன் என்று கூறிய ரேஷ்மா அதன்பின், நாம எல்லாருமே அன்புக்காகத்தான் ஏங்குறோம், நானும் சரி, மிகினும் அனைவரும் சரி அன்புக்காக ஏங்குகிறோம்’ என்று கூறினார்

ரேஷ்மாவை பேச்சை கேட்டு கொண்டிருந்த முகின் திடீரென எழுந்து வந்து ரேஷ்மாவை கட்டி அணைத்து கொண்டார். அப்போது ரேஷ்மா அவரை தட்டிக்கொடுத்து வாழ்த்து கூறினார். அந்த வாழ்த்து ஒரு தாயின் வாழ்த்து போன்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply