இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்ற அனைத்து ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் இந்த ஆண்டு கல்லூரிகள் திறக்கப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விடுத்த அறிக்கை ஒன்றில் இந்த கல்வி ஆண்டில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெறும்

மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என்றும் அவர்களுக்கு இந்த ஆண்டு கல்வி கல்லூரிகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நாளொன்றுக்கு ஐந்து வேளை மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply