இந்த ஆண்டுக்குள் நிலநடுக்கம், சுனாமி உண்மையா?
இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடுமையான நிலநடுக்கம் மற்றும் சுனாமி வரும் என்றும் சென்னையின் வரைபடமே மாறிவிடும் என்றும் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஒரு வதந்தி பரவிவருகிறது. இதுகுறித்து ஒருசில ஊடகங்கள் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றன.
கேரளாவை சேர்ந்த ஒருவர் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று புவியியல் துறையை சேர்ந்தவர்கள் கூறியபோது, 'நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்றும், எங்கே ஏற்படும் என்றும் யாராலும் கணித்து கூற முடியாது.
தமிழகத்தை பொருத்தவரையில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. இங்கு நிலத்தட்டுக்களின் அமைப்புகள் அவ்வாறு உள்ளது. எனவே ஊகங்கள் அடிப்படையில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்' என்று கூறினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.