shadow

இந்த அரசு அகல வேண்டும். மீண்டும் கமல்ஹாசன் காட்டமான டுவீட்

கடந்த சில மாதங்கலாக தமிழக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் குறித்தும் காரசாரமான டுவீட் செய்து வரும் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் இந்த அரசு விலக வேண்டும் என்று வலியுறுத்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவு செய்த இரண்டு டுவீட்டுகள் வருமாறு:

செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்’

‘அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்’

இந்த டுவீட்டுக்களுக்கு பின்னராவது அரசு விழித்தெழுந்து டெங்கு காயச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

டெங்கு காய்ச்சல் குறித்து உடனடி நடவடிக்கை தேவை என்று கமல்ஹாசன் கடந்த ஜூலை மாதமே ஒரு டுவீட் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply