இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை இந்து அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெங்கடேசன் பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு :செய்ததாக இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பணியிடை நீக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ல்
Leave a Reply
You must be logged in to post a comment.