இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராகிய முகமது ஷமி 15 நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி ஹசின் தனது கணவர் மீது அவரது சகோதரர் மீது போலீஸ் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்த வழக்கில் பல வாய்தாக்களில் ஷமி ஆஜராகவில்லை என தெரிகிறது

இதனையடுத்து வாரண்ட் பிறப்பித்தும் ஷமி ஆஜராகாததால் இன்னும் 15 நாட்களில் அவர் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே.இ.தீவுகள் தொடரை முடித்துள்ள ஷமி இன்று அல்லது நாளை நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply