shadow

திருவனந்தபுரம் :

ரூ.20 ஆயிரம் கோடி செலவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே இந்த போர்கப்பல் தயாரிக்கப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தது.

கப்பல் கட்டும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன் 4-வது மற்றும் இறுதி கட்ட சோதனை ஓட்டம் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி நடைபெற்றது.

சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இக்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 2-ந்தேதி நடக்கிறது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று போர் கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கொச்சி கடற்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

செப்டம்பர் 2-ந்தேதி கடற்படையில் இணைய இருக்கும் ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் 1700 வீரர்கள் பயணம் செய்யலாம்.

கப்பலின் மேல் தளத்தில் மிக் 29 ரக விமானங்கள், காமோவ் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்,60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் இறங்கவும், பறந்து செல்லவும் வசதிகள் உள்ளது. மேலும் கடற்படை வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கப்பல் செயல்பாட்டுக்கு வந்ததும் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடலோர பாதுகாப்பு வலுப்படும். மேலும் கடல் கண்காணிப்பும் அதிகரிக்கும்.

மேலும் விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இதன்மூலம் இந்தியாவும் இணைந்துள்ளது.