shadow

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்: கிரிக்கெட் ரசிகர்கள் விளாசல்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 306 ரன்கள் எடுத்த போதிலும் தோல்வி அடைந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து கூறிய போது இன்றைய நாளில் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது என்று கூறியுள்ளனர்
குறிப்பாக டி20 போட்டிகளில் மிக அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப்சிங், இன்றைய போட்டியில் 8 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக கூறியுள்ளனர்.

அதேபோல் சாஹல், உம்ரான் மாலிக் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் 60 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் மட்டுமே ஓரளவுக்கு சுமாராக பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் இன்றைய தோல்விக்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்களே என்று கிரிக்கெட் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.