இந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு!
ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் சவுதி அரேபிய இளவரசர் சல்மான் நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தார். அவரை இந்திய பிரதமர் மோடி கட்டிப்பிடித்து உற்சாக வரவேற்பை அளித்தார்.
முன்னதாக பாகிஸ்தான் சென்ற சவுதி அரேபிய இளவரசர் $20 பில்லியன் டாலர் பாகிஸ்தானில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோளின்படி சவுதி சிறையில் தண்டனை பெற்று வரும் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்யவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இளவரசர் சல்மான், குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இருதரப்புக்கும் இடையே, பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.