shadow

உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான மாலத்தீவுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என மாலத்தீவு அரசு சமீபத்தில் அறிவித்தது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவே இந்த அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்தியா மட்டுமின்றி தெற்காசிய நாடுகளில் இருந்து யாரும் தங்களது நாடுகளுக்கு சுற்றுலா பயணியாக வர வேண்டாம் என மாலத்தீவு அரசு கேட்டுக் கொண்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்தியா மட்டுமின்றி இந்தியாவின் அண்டை நாடுகளிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதே இந்த உத்தரவுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது