இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம் டுவிட்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி திஹார் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு இன்று 74வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை அடுத்து அவரது மகனும் சிவகெங்கை பாராளுமன்ற மக்களவை எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் நீண்ட கடிதம் ஒன்றை தனது தந்தைக்கு எழுதி அதனை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என ப.சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரே ஒரு வரியை தவிர வேறு எதுவும் அந்த டுவீட்டில் இல்லை. ப.சிதம்பரம் அவர்களின் பிறந்த நாளில் இப்படி ஒரு டுவீட் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply