இந்தியாவில் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்கள்
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க உபெர் மற்றும் மஹேந்திரா நிறுவனங்களிடையே கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மஹேந்திராவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஐதராபாத் மற்றும் புதுடெல்லியில் உள்ள தயாரிப்பு ஆலைகளில் தயாரிக்கப்பட இருக்கிறது.
முதற்கட்ட பணிகளை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் தயாரிப்பு பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உபெர் மற்றும் மஹேந்திரா நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் கீழ் 1900 கோடியில் மஹேந்திராவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் உபெர் தளத்தில் இந்தியா முழுக்க இயக்கப்பட இருக்கிறது.
மஹேந்திரா நிறுவனத்தின் e2oபிளஸ் ஹேட்ச் மற்று்ம இவெரிடோ செடான் உள்ளிட்ட மாடல்களின் எலெக்ட்ரிக் பதிப்புகள் வெளியிடப்பட இருக்கின்றன. உபெர் ஓட்டுநர்கள் மஹேந்திரா எலெக்ட்ரிக் வாகனங்களை குறைந்த விலை, கவர்ச்சிகர நிதியுதவி மற்றும் காப்பீடு உள்ளிட்டவற்றில் பெற முடியும்.
இத்துடன் நகரங்களில் பொது பயன்பாடுகளுக்கு என கட்டமைக்கப்பட இருக்கும் சார்ஜிங் மையங்களை உருவாக்குவதற்கு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் மஹேந்திரா நிறுவனம் இணைந்து பணியாற்ற இருக்கிறது. மஹேந்திரா சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென ஓட்டுநர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கப்பட இருக்கிறது.
மஹேந்திரா மட்டுமின்றி ஈச்சர் மோட்டார்ஸ், வால்வோ, மாருதி சுசுகி என பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக ஈச்சர் நிறுவனம் எலெக்ட்ரிக் பேருந்து ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
Leave a Reply
You must be logged in to post a comment.