shadow

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 95-ஆக இருந்தது. இன்று 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 110 பேர் நலம் பெற்றுள்ளனர்.

இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 1,935 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது நேற்றைவிட 14 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் நேற்று சண்டிகரில் ஒருவர் இறந்துள்ளார்.

மொத்த பலி எண்ணிக்கை 5,30,762 ஆக உயர்ந்துள்ளது.