இதை மனதில் வைத்து கொண்டு என்னிடம் வராதீங்க: ஏ.ஆர்.ரஹ்மான்

பழைய சூப்பர் பாடல்களை ரீமிக்ஸ் செய்வது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வழக்கமாக இருந்து வரும் நிலையில் ரீமிக்ஸ் செய்வது குறிப்பாக என்னுடைய பாடலை நானே மீண்டும் ரீமிக்ஸ் செய்வது என்பது எரிச்சலான விஷயம் என்றும் புதிய பாடல்களை இசை அமைக்கவே பெரும்பாலும் தனக்கு ஆர்வம் உள்ளதாகவும் இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்

ரீமிக்ஸ் எண்ணத்துடன் இருக்கும் இயக்குனர்கள் தன்னை அணுக வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஒருசில இயக்குர்களின் கட்டாயத்தால் அவர் எஸ்.ஜே.சூர்யா நடித்த ’நியூ’ என்ற படத்திற்காக ’தொட்டால் பூ மலரும்’ என்ற பாடலையும் விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ என்ற படத்திற்காக ’பொன்மகள் வந்தாள்’ என்ற பாடலையும் ’ஓகே கண்மணி’ படத்திற்காக ’பம்பாய்’ படத்தின் ‘அந்த அரபிக் கடலோரம்’ என்ற பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மான் ரீமிக்ஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply