shadow

இதைவிட வெட்கக்கேடு வேறென்ன இருக்க முடியும்? மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்கும் என நேற்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் என அதிமுக அமைச்சர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் முதல்வர் மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை அப்பீல் செய்யும் என இன்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க என்ற கட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதற்கு இதுவே உதாரணம் என்றும், இதைவிட வேறென்ன வெட்கக்கேடு இருக்க முடியும்? என்றும் கூறியுள்ளார்.

மேலும் முதல்வர் தன் மீதான ஊழல் புகாருக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமல் கட்சியின் அமைப்புச் செயலாளரை வைத்து பதிலளிப்பதன் மூலம், திமுக அளித்துள்ள புகார்கள் அனைத்தும் உண்மை என்பது நிரூபணமாகிறது என்றும், மேலும், இவர்களின் அராஜகத்தால் மாநிலத்தின் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரமே பறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

 

Leave a Reply