இது என்ன பூனையா? இல்லை புலியா?
பூனையா? புலியா? என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு உலகிலேயே மிகப்பெரிய பூனை என்ற சாதனையை இத்தாலியில் உள்ள பூனை பெற்றுள்ளது. இந்த பூனையை வடக்கு இத்தாலியில் வசிக்கும் “எட்கர்” தம்பதி வளர்த்து வருகின்றனர். இந்த பூனையின் நீளம் 120 சென்டிமீட்டர் ஆகும்.
இதுகுறித்து இந்த பூனையை வளர்க்கும் எட்கர் தம்பதிகள் கூறியதாவது: இந்த பூனையயஇ மக்கள் முதலில் பார்த்த உடனே அதிர்ச்சி அடைவார்கள். காரணம் அதன் அமைப்பு. இருப்பினும் எங்களுக்கு இந்த பூனை மிக பெரும் வாரமாகவே பார்க்கிறோம்” இதை பார்க்கும் மக்கள் உடனே ஓடி வந்து பூனையை கையில் வைத்து கொண்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். மீன் மற்றும் பிஸ்கேட் என்பது எங்கள் பூனை விரும்பி உண்ணும் உணவு.
உலகிலேயே பெரிய பூனையாக இருந்தாலும் இந்த பூனை ரொம்ப அடக்கமான பூனையாம். இந்த பூனையிடம் இருந்து நாங்கள் மிகுந்த அமைதியாய் இருப்பது எப்படி என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்” என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர் எட்கர் தம்பதியினர்
Leave a Reply
You must be logged in to post a comment.