இதுவரை யாருக்கும் கிடைக்காத புகழ்: கதறி அழுத ஆடியன்ஸ்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று தர்ஷன் வீட்டை விட்டு வெளியேறி கமல் முன்னிலையில் தோன்றியபோது ஆடியன்ஸ்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அதே நேரத்தில் தர்ஷனை வெளியேற்றத்தை ஆடியன்ஸ்களால் ஜீரணிக்கவே முடியவில்லை

ஒரு கட்டத்தில் ‘தர்ஷன் தர்ஷன்’ என்று கோஷமிட்டனர். ஒருசில ஆடியன்ஸ்கள் கதறி அழுதேவிட்டனர். இதை பார்த்த கமல் தர்ஷன் மீது இவ்வளவு பாசம் வைத்த நீங்கள் எப்படி அவருக்கு ஓட்டு போடாமல் போனீர்கள்’ என்று கேட்க ஆடியன்ஸ் மத்தியில் பயங்கர அமைதி

அதன்பின் தர்ஷன், தனது பிக்பாஸ் வீட்டின் 100 நாள் அனுபவங்களை கூறினார். இதுவொரு எதிர்பாராத வாய்ப்பு என்றும் இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தி கொண்டதாக நினைப்பதாகவும் கூறினார். மேலும் ஆடியன்ஸ்கள் அன்பு மழையில் அவர் முழுமையாக நனைந்துவிட்டார்.

Leave a Reply