shadow

இடைத்தேர்தலுக்கு வலுத்து வரும் எதிர்ப்பு: அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் கலெக்டர்

தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் வரும் 28ஆம் தேதி தேர்தல் நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகளிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இடைத்தேர்தலை நடத்த எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply