இங்கிலாந்து, ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் செய்யும் ராகுல்காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்கிறார். அங்கு வாழும் இந்தியர்களிடம் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்ற ராகுல்காந்தி இரண்டு நாட்கள் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசும் ராகுல்காந்தி பின்னர் ஹம்பர்க் மற்றும் பெர்லின் நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்.
பின்னர் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து செல்லும் ராகுல்காந்தி அங்கு வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடுவதுடன், பிரபல வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராகுல் செல்லும் செல்லும் 2வது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.