ஆஸ்திரேலியா சாலையில் ஓடிய பீர் ஆறு!

ஆஸ்திரேலியாவில் பீர் மதுபானம் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானம் சாலையில் கொட்டி சாலையில் பீர் ஆறு ஒடியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

ஆஸ்திரேலியாவில் நேற்று பீர் டின்கள் அடங்கிய நூற்றுக்கு மேற்பட்ட அட்டைப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வடக்கு கடற்கரை வழியாக சென்றது.

லாரி கிளெந்தோர்ன் என்ற இடம் அருகே நெடுஞ்சாலை வழியாக வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டு மண்மேடு மீது மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பீர் பானங்கள் சாலையில் கொட்டி சேதமாகின.

தகவல் அறிந்து வந்த போலீசார், அப்பகுதி நெடுஞ்சாலையை மூடி சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளனர். இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி தப்பியதாக பீர் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா பிட்டர் பீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply