shadow

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: இந்தியா நிதான ஆட்டம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களான முரளிவிஜய், கே.எல்.ராகுல் ஆகியோர்களுக்கு பதிலாக விஹாரி, மயங்க் அகர்வால் களமிறங்கினர். விஹாரி 8 ரன்களில் அவுட் ஆகிய போதிலும் அறிமுக ஆட்டக்காரர் அகர்வால் நிதானமாக விளையாடி 72 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

தற்போது இந்திய அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோஹ்லி 2 ரன்களிலும், புஜாரே 33 ரன்களிலும் விளையாடி வருகின்றனர்.

 

Leave a Reply