ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யாவின் தந்தை சஸ்பெண்ட்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை நேற்று கைது செய்த சிபிசிஐடி போலீசார் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிமன்றம் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குற்றத்தை செய்த மாணவர் உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெங்கடேசன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உதவிப் பேராசிரியராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகனை டாக்டராக்க குறுக்கு வழியில் ஈடுபட்டதால் சிறைக்கு சென்றது மட்டுமின்றி தற்போது சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பொறுப்புள்ள டாக்டரே இவ்வாறு குறுக்கு வழியில் ஈடுபட்டதை மன்னிக்கவே முடியாது என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.