shadow

ஆளுனர் உரைக்கு எதிர்ப்பு! திமுக-காங்கிரஸ் வெளிநடப்பு

தமிழக சட்டமன்றம் இன்று காலை கூடிய நிலையில் சற்றுமுன் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சற்றுமுன் தமிழக சட்டமன்றம் கூடிய நிலையில், ‘அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கினார். மேலும் எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இதுவே எனது செய்தி என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர். கஜா புயல் நிவாரணம், ஹெச்ஐவி ரத்த விவகாரம், ஸ்டெர்லைட் உள்ளிட்டவை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக – காங். வெளிநடப்பு செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply