கொரோனா அச்சம்
ஆந்திராவில் பிறக்கும்போதே இறந்து பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனோ தொற்று இருப்பதாக கூறப்பட்டதால் அந்த குழந்தையை அடக்கம் மருத்துவ ஊழியர்கள் மறுத்தனர்.
இதனால் அந்த குழந்தையை பெற்ற தந்தையே குழந்தையின் பிணத்தை கண்ணீருடன் ஆற்றில் வீசிய பரிதாப சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திராவில் கர்நூல் மாவட்டம், ஸ்ரீவெல்லா வட்டம் கொட்டபாடூ என்ற கிராமத்தை சேர்ந்த சம்சா வாலி என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் அரசு பொது மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண் குழந்தை பிறக்கும்போதே இறந்து பிறந்தது.
இதனையடுத்து குழந்தையின் உடலை அடக்க கிராமத்து பெரியவர்களிடம் விடப்பட்ட கோரிக்கை கொரோனா அச்சத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் வேறு வழியின்றி குழந்தையின் தந்தை சம்சா வாலி குழந்தையின் பிணத்தை ஆற்றில் வீசியுள்ளார். வாய்க்காலில் குழந்தையின் உடல் மிதப்பதை கண்ட சிலர் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு, கிராமத்தினரிடம் பேசி நல்லடக்கம் செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.