shadow

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று அறிவிப்பா?

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே சொந்தம் என்று நேற்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்த நிலையில் இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் நிலையில் இன்று இந்த தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அனேகமாக டிசம்பர் 14ஆம் தேதி தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை செய்த பின்னர் அதிகாரபூர்வமாக தேர்தல் தேதியை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக, தினகரன் அணி, திமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply