shadow

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரனுக்கு சுப்பிரமணியன் சுவாமி திடீர் ஆதரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இணையாக டிடிவி தினகரன் வாக்கு சேகரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழர்கள் அனைவ்ரும் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதனால் பாஜக கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி பாஜக நிர்வாகிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதில் அங்கு திமுகவுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. எனவே திமுகவை தோற்கடிக்க தமிழர்கள் தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பாஜக சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டு அவருக்கு ஆதரவாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவரே தினகரனுக்கு ஆதரவாக டுவீட் செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply