shadow

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய திட்டமா?

ஆர்.கே.நகர் தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு சுறுசுறுப்பாக தயாராகி வருகின்றன. தேமுதிக இந்த தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துவிட்ட நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றூ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்

மேலும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். இந்த கருத்து குறித்தும் தமது கட்சி ஆலோசிக்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியாக இணைந்து போட்டியிடும் என்று வதந்திகள் கூறுகின்றன. ஆனால் இப்போதைக்கு இது வதந்தி என்று தமிழிசை செளந்திரராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply