ஆர்யா-சாயிஷா திருமணம் நடக்காது: ஒரு நடிகையின் நம்பிக்கை
நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த திருமண செய்தி வதந்தி என்றும், இந்த திருமணம் 99% நடக்க வாய்ப்பு இல்லை என்றும் நடிகை அபர்நதி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்யா நடத்திய ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அபர்நதி தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கும் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
ஆர்யாவை திருமணம் செய்வதற்காக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்நதி, ஆர்யா திருமண செய்தி குறித்து கூறுகையில், ‘ஆர்யா-சாயிஷா திருமண செய்தி 99% வதந்தி என்றும் ஆர்யா, சாயிஷா இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இதுகுறித்த செய்தியை வெளியிட்டால் மட்டுமே இதனை நம்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அபர்நதியின் சந்தேகத்தை போக்க ஆர்யாவும், சாயிஷாவும் தங்கள் திருமண செய்தியை உறுதி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.