ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன: கனிமொழி டுவீட்

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நீர் ஆதரமாக விளங்கும் பாபநாசம் அணையின் நீர் மட்டம் 10 அடிக்குக் கீழ் குறைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன. கட்டப்பட்ட காலம் முதல் தூர்வாரப்படாத அணையின் அடிப்பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

அணையிலிருந்து மக்களிள் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படும் சிறிதளவு நீரும் துர்நாற்றத்துடனும், சகதியுடனும் விநியோகிக்கப்படுவதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.

தமிழக அரசும், அதிகாரிகளும் அலட்சியப்போக்கை விடுத்து துரிதநடவடிக்கை மேற்கொண்டு இறந்த மீன்களை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், அணையைத் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

Leave a Reply