பிரதமருக்கு கடிதம் எழுதிய திருச்சி மாணவர்
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாட்டேன் என்றும் வகுப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு திருச்சியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
திருச்சி காவிரி கரையோரமாக இருக்கக்கூடிய சர்க்கார் பாளையம் சாலையில் காந்திபுரம் பகுதியில் உள்ள கிராமத்தில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் துரை திரவியம்
இவர் தனக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு துவங்க உள்ளது என பள்ளியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது என்றும், ஆனால் தகவல் வந்தவுடன் தன்னால் பங்கேற்க முடியாது என பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டேன் என்றார்.
இதுகுறித்து அவர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் பிரதமரிடம் இருந்து பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.