shadow

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி தடை விதித்த நிலையில் இந்த தடைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை சரியான அனுமதி பெற்றே விற்பனை செய்து வரும் நிலையில் இந்த தடை உத்தரவால் தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டதாக ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் முறையிட்டனர். எனவே தனி நீதிபதி விதித்த தடைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த இருநீதிபதிகள் அமர்வு அதுவரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடையில்லை என்று அறிவித்தனர்.

Leave a Reply