ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் தூக்கில் தொங்கி தற்கொலை!
ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் என்பவர் தனது வீட்டில் வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் உயிருக்கு போராடிய அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது
முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது இன்னும் தெரியவில்லை. அவர் ஏதாவது கடிதம் எழுதி வைத்திருக்கின்றாரா? என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.