ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் சோதனை ! நடந்தது என்ன?

ஆண்டிப்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ரூ.2 கோடி வந்து உள்ளதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நேற்று ஆண்டிபட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் சோதனை செய்த நிலையில் அங்கு ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மீதம் இருந்த பணங்களை அங்கு ஏற்பட்ட கலவரத்தால் பலர் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர் என்றும் வருமானவரித் துறையினர் கூறியுள்ளனர். மேலும் அமமுக அலுவலகத்தில் சோதனை இன்று காலை 5 மணி அளவில் முடிந்துவிட்டதாகவும், 94 சிறு பாக்கெட்டுகளில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பாக்கெட்டிலும் வாக்காளரின் பெயர் மற்றும் 300 ரூபாய் பணம் என எழுதப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது

Leave a Reply