ஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது, இந்த கோவிலுக்கு இந்த பகுதியில் இருந்து மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவதுண்டு.

இந்த நிலையில் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைதிருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்து வரும் நிலையில் இந்த வருடம் நடந்த தேரோட்டத்தை காணவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்.

பக்தர்கள் அனைவரும் தேரை வடம்பிடித்து இழுத்து தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply