ஆஜராக வேண்டிய 2 பேர் திடீர் மாயம்: விஷால் அதிர்ச்சி
தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்ட விஷாலின் வேட்புமனு மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டுமானால் அவரை முன்மொழிந்து பின்னர் மறுத்த அந்த இரண்டு பேர்கள் இன்று மதியம் 3 மணிக்குள் தேர்தல் ஆணைய அலுவலத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்தது.
இதனால் விஷால் தரப்பினர் தீபன் மற்றும் சுமதி ஆகிய அந்த இரண்டு பேர்களையும் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்கள் எங்கிருக்கின்றனர் என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து விஷால் தனது டுவிட்டரில், சுமதி, தீபன் இருவரையும் காணவில்லை., அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என அஞ்சுகிறேன். நான் தேர்தலில் போட்டியிடுவது கூட முக்கியமில்லை. அந்த இருவரின் பாதுகாப்பே எனக்கு முக்கியம் என்று டுவீட் செய்துள்ளார். மேலும் ஜனநாயகம் முழுமையாக செத்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்,.
Leave a Reply
You must be logged in to post a comment.