shadow

ஆக்லாந்து டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

நியுசிலாந்துக்கு எதிரான 2வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. ஆக்லாந்தில் இன்று நடந்த 2வது டி20 போட்டியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் குவித்தது. கிராந்தோம் 50 ரன்களும், டெய்லர் 42 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பாண்ட்யா 3 விக்கெட்டுக்களளயும் அஹ்மது இரண்டு விக்கெட்டுக்களையும் புவனேஷ்குமார், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்

இந்த நிலையில் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 18.5 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 50 ரன்களும், ரிஷாப் பண்ட் 40 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியால் தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.

Leave a Reply