அழுகிய நிலையில் சுஜித் உடல் மீட்பு: இறந்து எத்தனை மணி நேரம் ஆனது?

கடந்த வெள்ளியன்று மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த 80 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணியினர் போராடிய நிலையில் தற்போது அந்த சிறுவன் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்

சிறுவன் சுஜித் விழுந்த ஆழ்துழை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து சிறுவனின் உடல் சிதைந்து விட்டதாக தெரிய வந்துள்ளதாக நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

அழுகிய நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும் இந்த பணி முடிவடைந்ததும் சிறுவனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

சுஜித்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோர் மருத்துவமனையில் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

குழந்தையின் உடலை தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள் மீட்டதாகவும் இரண்டு ஆழ்துளை கிணறுகளும் சிமெண்ட் கான்கிரீட்டால் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Leave a Reply