அழகிரி, ஸ்டாலின் கண்டிப்பாக இணைவார்கள்: மதுரை ஆதினம் நம்பிக்கை
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மு.க.ஸ்டாலின் இதற்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது.
இருப்பினும் அமைதிப்பேரணி, வெண்கலச்சிலை என தன் மீது ஊடகங்களின் பார்வை விழும்படி அழகிரி நடந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அழகிரியும் ஸ்டாலினும் இணைந்தால்தான் திமுக வலுப்பெரும் என்றும், அவர்கள் இருவரும் இணைவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் மதுரை ஆதினம் கருத்து தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.