அரிய வகை பாம்பை கடத்திய இருவர் கைது!

ஜார்கண்ட் மாநிலத்தில் உலகின் அரிய வகை பாம்பு ஒன்றை கடத்தியதாக இருவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரண்டு கடத்தல்காரர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அந்த ஓட்டலில் ரெய்டு செய்த போலீசார் இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிய வகை ‘சாண்ட் போ’ என்ற பாம்பு கைப்பற்றப்பட்டது. இந்த பாம்பு உலகிலேயே மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply