shadow

அரசை விமர்சித்து மீம்ஸ் போடுவது யார்? அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசின் செயல்பாடுகளை வேலைவெட்டி இல்லாத சிலர் மீம்ஸ் போட்டு விமர்சனம் செய்வதாகவும், தான் சொல்லாத கருத்துக்களை திரித்து மீம்ஸ் போட்டு வருவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், மழை பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் என்று தான் கூறியதாக வெளிவந்துள்ள மீம்ஸ்கள் குறித்து கருத்து கூறுகையில் சில வேலைவெட்டி இல்லாத மீம்ஸ் கிரியேட்டர்கள் தான் சொன்னதை திரித்து மீம்ஸ் போட்டுள்ளனதாக கூறினார்

பெரிய மழை பெய்தால் தண்ணீர் தேங்கும், பின்னர் கால்வாய் வழியாக வெளியேறிவிடும் என்று மட்டுமே தான் கூறியதாகவும், ஆனால் திமுகவில் உள்ள ஐடி விங், தினகரன் குரூப்பில் உள்ள ஐடி விங் மற்றும் சிலர் இதை திரித்து மீம்ஸ் போட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் தமிழக அரசை குறை கூறவில்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்

Leave a Reply