shadow

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை வரும் 31-ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக மாநிலதேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்வதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: 3 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.