shadow

அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக வருகை திடீர் ஒத்தி வைப்பு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வருகை ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்டணி பேச்சுவார்த்தை தாமதம் ஆகுக்ம் என தெரிகிறது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தமிழகம் வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியது.

ஆனால் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திடீரென சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதை தொடர்ந்து பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்புகள் பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய பொறுப்புகளின் காரணமாக பியூ​ஷ் கோயலின் தமிழக வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பியூஷ் கோயம் வரும் 20 ஆம் தேதிக்கு தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply