அமைச்சரின் அலட்சியம் வீரர்கள் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள உத்திர கன்னடா மாவட்டத்தில், ஹலியல் என்ற ஊரில், அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை, வருவாய் துறை அமைச்சர் தேஷ்பாண்டே நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்களுக்கு, பல்வேறு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது வேறு நிகழ்ச்சிக்கு அவசரமாக செல்ல இருந்த அமைச்சர், வீரர்களை மேடைக்கு அழைக்காமல் மேடையில் இருந்தபடியே நலத்திட்டப் பொருட்களை அவர்களை நோக்கி தூக்கி எறிந்தார். இதை சரியாகப் பிடிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை விளையாட்டு வீரர்களுக்கு ஏற்பட்டது. இந்த நிகழ்வு விளையாட்டு வீரர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.