ஒரே நாளில் 55,251 பேருக்கு பாதிப்பு
அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் உச்சகட்ட மோசமான நிலையை கொரோனா எட்டியுள்ளதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 55,251 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 48,584 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 23,135 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் 10,134 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சற்றுமுன் வரை உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,941,774
என்பதும் பலியானவர்களின் எண்ணிக்கை 545,651 என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.