அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான் எல்லையை தவிர்க்கவும் என இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது

மேலும் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து இயங்கும் என்றும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது. ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு தேவைப்பட்டால் தூதரக உதவிகளை உடனடியாக செய்யப்படும் என்று கூறியுள்ள மத்திய அரசு ஈராக்கிற்கு பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது

ஈரான் ஈராக் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply