அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ: 9 பேர் பரிதாப பலி
அமெரிக்காவில் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்துள்ளதாகவும், இதில் 2 இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிவதுடன் குடியிருப்பு பகுதி அருகிலும் தீ வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதுவரை, காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இவர்களில் 5 பேர் காருக்குள் இறந்து கிடந்ததாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். . தீப்பிடித்த பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.