shadow

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதற்கு அமரர் ஊர்திகள் மற்றும் ஆம்புலன்ஸில் கிடைக்காத நிலையில் உள்ளன

இந்த நிலையில் புனேவில் உள்ள நகராட்சி 10 பள்ளி பேருந்துகளை கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட வைத்துள்ளது.

இந்த பள்ளி பேருந்துகளில் இறந்த உடல்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணமும் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply